Skip to main content

எல்லையில் சீனா படைகளைக் குவித்துவரும் சூழலில் சாலைகளைத் தயார்படுத்திவருகிறது இந்தியா!

Sep 17, 2020 257 views Posted By : YarlSri TV
Image

எல்லையில் சீனா படைகளைக் குவித்துவரும் சூழலில் சாலைகளைத் தயார்படுத்திவருகிறது இந்தியா! 

லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்குக்கரைப் பகுதியில் சீன வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ல் அத்துமீற முயன்றனர். ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே கணித்த இந்திய ராணுவம், முன்னேற்பாட்டால் அந்த முயற்சியை முறியடித்தது.



கடந்த ஜூனில் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தச் சம்பவம் இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை அதிகரித்தது. அதன் பிறகு இரு நாடுகள் தரப்பில் ராணுவம், பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் தங்களது ராணுவத்தை எல்லையிலிருந்து பின்வாங்கிக்கொள்வதாக சீனா தெரிவித்தது. ஆனால், உண்மையில் நடப்பதோ வேறு.



சீன ராணுவம்!



இரு நாட்டு எல்லை உடன்படிக்கைகளை மீறி சீனா கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் படைகளைக் குவித்துவருகிறது. பாங்கோங் சோ ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் மட்டும் 10,000 துருப்புகளை சீனா குவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கிழக்கு லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் மட்டும் சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியைச் சேர்ந்த 52,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 29-30 சம்பவத்துக்குப் பின்னர் எல்லையில் இரு நாடுகளுமே படைகளைக் குவித்துவருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 35 பட்டாலியன்களை லடாக்கில் நிறுத்தியிருந்த சீன ராணுவம், செப்டம்பரில் அந்த எண்ணிக்கையை 50 பட்டாலியன்களாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு பட்டாலியனும் 1,000 முதல் 1,200 வீரர்களை உள்ளடக்கியது. `இந்திய ராணுவம் எல்லையில் படைகளைக் குவித்ததைத் தொடர்ந்தே அதே எண்ணிக்கையிலான வீரர்களை நாங்களும் குவித்திருக்கிறோம்’ என்கிறார்கள் சீனா தரப்பில்.



எல்லையில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுவரும் நிலையில், அதை இந்திய ராணுவம் இதுவரை வெற்றிகரமாக முறியடித்துவருகிறது. பாங்கோங் சோ ஏரியைச் சுற்றியிருக்கும், புவியியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்ற நான்கு பகுதிகள் தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெற இந்திய ராணுவம் யோசித்துவருகிறது.



பேச்சுவார்த்தையின் சுமூகமான உடன்பாடு எட்டும் வரையில் எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல், அருணாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதி மட்டுமல்லாமல், நேபாளம், பாகிஸ்தான் எல்லைகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முன்னெப்போதையும்விட பலப்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.



ஐந்து அம்ச உடன்படிக்கை!



பாங்கோங் சோ ஏரி அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெனரல் வாங் யி (Wang Yi) இடையிலான சந்திப்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. எல்லைப் பிரச்னைகளுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியாகவும் வாங் யி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் மாஸ்கோ சந்திப்பின்போது இரு தரப்பிலும் எல்லையில் அமைதி திரும்ப ஐந்து அம்ச உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டனர்.



இதன் மூலம் படிப்படியாக எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை இந்த வாரமே தொடங்கும் என்றும் தெரிகிறது.



 



 



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை