Skip to main content

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

Apr 20, 2021 180 views Posted By : YarlSri TV
Image

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு! 

கொரோனா தொற்று காரணமாக மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கும் சுகாதார நடைமுறைகளுடன் பேரணிகளை நடத்தவும் பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.



பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (திங்கட்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.



இதன்போது தொழிலாளர் தினத்தை குறிக்கும் வகையில் மே தின கொண்டாட்டங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



இந்த கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் ஜி.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை