புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
May 29, 2020 258 views Posted By : YarlSri TV
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுவனுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே 39 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவரது உறவினர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் மூலம் சிறுவன் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 40 ஆனது.புதுவை மாநிலத்தில் ஏற்கனவே 6,808 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 37 பேருக்கு மட்டுமே முடிவுகள் வர வேண்டியுள்ளது. வரும் 31-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்வு ஏற்படும் என்று தெரிகிறது. எனவே தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறுகையில், ‘தற்போது மக்கள் ஓரளவு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அவர்களது பங்களிப்பு இல்லாமல் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிரமமானதாகும்’ என்றார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
3 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
3 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago