Skip to main content

போருக்கு தயாராகுமாறும், சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

May 28, 2020 286 views Posted By : YarlSri TV
Image

போருக்கு தயாராகுமாறும், சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். 

இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக் அருகே இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இருநாடுகளும் லடாக் எல்லைப்பகுதிளில் படைகளை குவித்து வருகின்றன. லடாக்கின் பாங்கோங் ஏரியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீன ராணுவ விமானத்தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு, போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.



இந்நிலையில் சீன ராணுவ அதிகாரிகள் பங்கேற்ற வருடாந்திர நாடாளுமன்ற கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின் பிங், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஏற்பட உள்ள நிலைமைகள் குறித்து விளக்கினார். மேலும் சீன படைகளுக்கான பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை