Skip to main content

இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி இந்தோனேசியாவில் சம்பவம்!

Jan 05, 2024 25 views Posted By : YarlSri TV
Image

இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி இந்தோனேசியாவில் சம்பவம்!  

இந்தோனேசியாவின் முக்கியமான



தீவுகளில் ஒன்றான ஜாவாவில் இன்று (05) இரண்டு தொடருந்துகள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.



இந்தோனேசிய தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற தொடருந்து சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் தொடருந்தின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது .



விபத்தில் 3 பேர் பலி 28 பேர் காயம்



இந்த தொடருந்து விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.

  

இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டதுடன் 3 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை