யாழில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பஸ்தருக்கும் இடையே மோதல்
May 09, 2020 314 views Posted By : YarlSri TV
யாழில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பஸ்தருக்கும் இடையே மோதல்
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் இரட்டைப் புலவு வைரவர் ஆலயத்துக்கு அருகில் சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கும் குடும்பஸ்தருக்கும் இடையே மோதல் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
குறித்த வீட்டில் வசிப்போருக்கு இடையே சில காலமாக முரண்பாடு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் குறித்த வீட்டிற்கு சாதாரண உடையில் சென்ற இரு பொலிஸார் அங்கு பிரவேசித்ததை அடுத்தே குழப்பம் நிலவியது.
அவர்கள் எழுப்பிய குரல் கேட்டு அயலில் உள்ள இளைஞர்களும் குறித்த வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அங்கு இரு பகுதியினருக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், குறித்த வீட்டில் வசிக்கும் இளைஞன் ஒருவரும் காயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அந்த வீட்டிலுள்ள நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட நோயாளர் காவு வண்டியையும் பொலிசார் திருப்பி அனுப்பியதாக மக்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago