இந்த ஆண்டில் ஓய்வு பெறப் போகும் 68 மாநிலங்களவை எம்.பி.க்கள்..!
Jan 06, 2024 42 views Posted By : YarlSri TV
இந்த ஆண்டில் ஓய்வு பெறப் போகும் 68 மாநிலங்களவை எம்.பி.க்கள்..!
நடப்பாண்டில் (2024-ம் ஆண்டு) மாநிலங்களவையைச் சேர்ந்த 68 எம்.பி.க்கள் ஓய்வு பெறவுள்ளனர். இதில் பாஜகவைச் சேர்ந்த 60 எம்.பி.க்களும் அடங்குவர். மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். இந்நிலையில் இந்த ஆண்டு மாநிலங்களவையிலிருந்து 68 எம்.பி.க்கள் ஓய்வு பெறப் போவ தாக மாநிலங்களவை அலுவலகம் தெரிவித்துள்ளது.
9 அமைச்சர்கள்: இந்தப் பட்டியலில் 9 மத்திய அமைச்சர்கள் உட்பட 60 பாஜக எம்.பி.க்களும் அடங்குவர். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவர்களது பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடையவுள்ளது. ஏப்ரலில் மட்டும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
உத்தரபிரதேசத்திலிருந்து 10 எம்.பி.க்களும், மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 6 எம்.பி.க்களும், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 5 எம்.பி.க்களும், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 4 எம்.பி.க்களும், ஒடிசா, தெலங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 எம்.பி.க்களும், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 எம்.பி.க்களும், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு எம்.பி.யும் ஓய்வு பெறவுள்ளனர்.
நியமன எம்.பி.க்கள்: மேலும் 4 நியமன எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய உள்ளது. பாஜக தலைவரான ஜே.பி. நட்டாவின் பதவிக் காலமும் முடிவடையவுள்ளது. இந்த முறை அவர் தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவர் வேறு மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
அதேபோல இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவைக்கு தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து எம்.பி.,க்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago