மலம் கழிக்க மக்களுக்கு தடையா? சிக்கலில் மாட்டிய மேயர்...
Dec 28, 2023 23 views Posted By : YarlSri TV
மலம் கழிக்க மக்களுக்கு தடையா? சிக்கலில் மாட்டிய மேயர்...
நியூசிலாந்தின் வெலிங்டனுக்கு அருகில் உள்ள லோயர் ஹட் என்ற இடத்தில் வசிப்பவர்கள், வெலிங்டன் வாட்டரால் நிர்வகிக்கப்படும் கழிவுநீர் ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக, துர்நாற்றத்தைத் தணிக்க மக்களை ‘மலம் கழிக்கக்கூடாது’ என்று மேயர் கேம்ப்பெல் பாரி பரிந்துரைத்ததாக சமீபத்திய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இருப்பினும், கடந்த டிசம்பர் 26 மேயர் பாரி, நகைச்சுவையாகக் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறினார். அத்தகைய அறிவுரை எதுவும் வழங்கப்படவில்லை என்பதை வலியுறுத்தினார். இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வெலிங்டன் நீர் மற்றும் ஆலை மேலாண்மை ஒப்பந்ததாரர் வியோலியா நியூசிலாந்து ஆலை எல்லைகளுக்கு அப்பால் கடும் துர்நாற்றத்தை வெளியேற்றியதற்காக 13 ஆயிரம் டாலர்கள் அபராதத்தை எதிர்கொண்டார். உள்ளூர் நிர்வாகிகளும் அபராதத்தை விதித்தனர். ஆலையின் பயோஃபில்டர்களை மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெலிங்டன் வாட்டர் நிறுவனம், ஆரம்பகட்ட பணிகள் முன்னேறி வருவதாகவும், ஜனவரி இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 13 மில்லியன் டாலர் NZD கணிசமான முதலீடு நீண்ட கால மேம்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. எவ்வாறாயினும், இடைப்பட்ட காலத்தில் மோசமான துர்நாற்றம் வீசும் என எதிர்பார்க்கப்படும் என அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பரவலான துர்நாற்றமானது குடியிருப்பாளர்களை ‘Stop the Stench’ என்ற குழுவை உருவாக்கத் தூண்டியுள்ளது. மேலும், உள்ளூர் தலைவர்களும் இப்பிரச்னையை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்துகின்றனர். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் இத்தகைய நிலையால் தவிர்க்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் உள்ள சிரமங்கள் முதல், பொதுமக்கள் அலுவலகங்கள் செல்வது தொடங்கி அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக தெரிகிறது. துர்நாற்றம் காரணமாக உணவு உண்பதைக் கூட அவர்கள் தவிர்த்ததாக புகார்கள் உள்ளன.
இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வுகான வேண்டும் மற்றும் நிரந்தர தீர்வு தேவை என்ற குழுவின் குரல்கள் நியூசிலாந்தில் எதிரொலிக்கின்றன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago