Skip to main content

மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை- மூவர் கைது

Nov 10, 2023 40 views Posted By : YarlSri TV
Image

மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை- மூவர் கைது 

மூதாட்டி ஒருவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக  சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.



  வடமராட்சி – அல்வாய் கிழக்கு  பகுதியில் கடந்த ஒக்டோபர் 5ம் திகதி மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து 

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.



 உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து குறித்த மூதாட்டியை பராமரித்து வந்த இருவர் ,வீட்டு வேலையாள் உட்பட  மூவரை சந்தேகத்தின் பேரில் நெல்லியடி பொலிஸார் நேற்று (9) கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை