கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!
Sep 16, 2022 53 views Posted By : YarlSri TV
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி ஆரம்பம்!
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி இலங்கையில் நடைபெறும் 23வது கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியாகும்.
இந்த புத்தகக் கண்காட்சி இன்று முதல் செப்டம்பர் 25ஆம் திகதி வரை காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை நடைபெறுகிறது.
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று காலை கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு நடத்த முடியாததால் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச புத்தகக் கடைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பொது போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக புத்தகக் கண்காட்சி இரவு 07.00 மணிக்கு முடிவடையும் அதே நேரத்தில் சுகாதார அமைச்சகம் வழங்கிய கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு பம்பலப்பிட்டிஇ கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்தும் விசேட பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago