Skip to main content

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Oct 08, 2020 221 views Posted By : YarlSri TV
Image

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! 

காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கடந்த 5 ஆம் தேதி தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி பிரபு திருமணம் செய்துகொண்டார் என்றும் அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.



இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம் விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்எல்ஏ பிரபுவின் மனைவி சௌந்தர்யாவை நாளை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர்.நீதிமன்ற உத்தரவின் படி, மனைவியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவேன் என எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார்.



முன்னதாக நேற்றுமுன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்ட சௌந்தர்யா, தன்னை யாரும் கடத்தி வந்து திருமணம் செய்துகொள்ளவில்லை. நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்று தன்னிலை விளக்கமளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை