யாழில் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி!
Sep 24, 2022 68 views Posted By : YarlSri TV
யாழில் ‘திலீபன் வழியில் வருகிறோம்’ ஊர்தி பவனி!
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது யாழ். மாவட்டத்தை வந்தடைந்ததுடன் இன்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.
கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி பவனி பருத்தித்துறை நகருக்குள் இன்று காலை பயணித்தது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த ஊர்திப் பவனியானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் நாளை மறுதினம் திங்கட்கிழமை 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை சென்றடையவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago