புதினுக்கு இவ்வளவு நோய்களா.! போருக்கு இதுவே காரணம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
Mar 15, 2022 80 views Posted By : YarlSri TV
புதினுக்கு இவ்வளவு நோய்களா.! போருக்கு இதுவே காரணம்: உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர் மற்றும் அவரின் கடுமையான கோபத்திற்கு அவர் எடுத்துக்கொள்ளும் புற்றுநோய்க்கான ஸ்டீராய்டு சிகிச்சை முறைகளால் ஏற்பட்டுள்ள மனநல பாதிப்புகளே முக்கிய காரணம் என மேற்கு நாடுகளை சேர்ந்த உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் பல்வேறு நெருக்கடி மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியிலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை விளாடிமிர் புதின் தொடர்ந்து நடத்தி வருவதற்கு அவருக்கு ஏற்பட்டுள்ள மனநோய்யே காரணம் என அவுஸ்ரேலியா, கனடா, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய ஆகிய ஐந்து நாடுகளை சேர்ந்த உளவு கூட்டமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த உளவு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தகவலில், ஜனாதிபதி புதின் முடிவெடுக்கும் திறனானது கடந்த ஐந்து ஆண்டுகளில் அடையாளம் காணப்படும் அளவிற்கு மாறியுள்ளதாகவும், அவரை சுற்றி உள்ளவர்களிடம் அவர் சொல்வதிலும் அவர் உலகத்தை உணர்ந்து கொள்வதிலும் நிறைய மாற்றங்கள் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதற்கு ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு ஏற்பட்டுள்ள பார்கின்சன், டிமென்ஷியா நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் நீண்ட கால ஸ்டீராய்டு சிகிச்சை முறைகளால் ஏற்பட்டுள்ள மன பாதிப்புகளே காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் வெளியிட்ட பிரித்தானிய உளவுத்துறை, புதினின் இந்த கடுமையான கோபத்திற்கு நீண்டகால பயன்பாட்டினால் ஏற்படும் மனச்சிதைவே காரணம் என தெரிவித்துள்ளது.
69 வயதை தொட்டிருக்கும் ஜனாதிபதி புதின் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் தோலில் ஏற்பட்டுள்ள வெளிறிய நிறம் போன்ற மாற்றங்கள் வெளிப்படையாக அடையாளம் காண முடிகிறது என தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய நிகழ்வுகளில் அவர் விருந்தினர்களை சந்திக்கும் முறை மற்றும் தனிமை படித்திக்கொள்ளும் முறைகளின் மூலம் அவர் பிற துணை நோய்களில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முயற்சிப்பதாக தெரிகிறது என உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடனான சந்திப்பின் போது கடைப்பிடிக்கப்பட்ட இடைவெளியானது இதனை உறுதிப்படுவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago