ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர்களை சந்தித்த தலிபான் அரசியல் அலுவலக உறுப்பினர்!
Aug 18, 2021 75 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர்களை சந்தித்த தலிபான் அரசியல் அலுவலக உறுப்பினர்!
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்சி அதிகாரத்தில் உட்காரும் வேலையில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். தலிபான் அமைப்பின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானி பராதர் நாடு திரும்பியுள்ளார். எங்களால் எந்த நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படாது என உறுதி அளிக்கிறோம். உலக நாடுகளும் எங்களுக்கு அதே உறுதியை அளிக்க வேண்டும். அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த ஆட்சியை ஏற்படுத்துவோம் என தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே துணை அதிபர் அம்ருல்லா சாலே டுவிட்டரில் அதிரடி செய்தி ஒன்றை வெளியிட்டார். அதில் ‘‘ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிபர் இல்லை என்றால், நாட்டை விட்டு ஓடிவிட்டால், ராஜினாமா செய்து விட்டால் அல்லது காலமானால் துணை அதிபர்தான் காபந்து அதிபராவார். நான் தற்போது நாட்டிற்குள்தான் இருக்கிறேன். சட்டப்படி நான்தான் காபந்து அதிபர். அனைத்து தலைவர்களிடமும் ஆதரவையும் ஒருமித்த கருத்தையும் பெற நான்அவர்களை அணுகி வருகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தலிபான்கள் அரசியல் அலுவலக உறுப்பினர் அனாஸ் ஹக்கானி, ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமித் ஹர்சாய் மற்றும் மூன்று முறை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட அப்துல்லா அப்துல்லா ஆகியோரை காபூலில் சந்தித்து பேசியுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago