போரை உடனடியாக நிறுத்துங்கள்: ரஷ்யாவின் நிலக்கரி மன்னன் எச்சரிக்கை!
Mar 15, 2022 76 views Posted By : YarlSri TV
போரை உடனடியாக நிறுத்துங்கள்: ரஷ்யாவின் நிலக்கரி மன்னன் எச்சரிக்கை!
உக்ரைன் மீதான போரை ரஷ்யா விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்யாவின் முன்னணி உரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி மன்னரான ஆண்ட்ரே மெல்னிசென்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மீதான ரஷ்ய போர் மூன்றாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ரஷ்யா மீதும் அந்த நாட்டின் தொழிலதிபர்கள் மீதும் பல உலக நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனால் கடந்த 24ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புதின் தொடங்கிய போரை நிறுத்தி, அமைதியை பரவச்செய்யுமாறு அந்த நாட்டின் பிரபல பணக்கார தொழிலதிபர்களான மிகைல் ஃப்ரிட்மேன், பியோட்ர் அவென் மற்றும் ஒலெக் டெரிபாஸ்கா ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அந்தவகையில், உக்ரைன் தாயாருக்கு பெலாரஸ்ஸில் பிறந்த ரஷ்ய குடிமகன் மற்றும் முன்னணி உரம் மற்றும் நிலக்கரி உற்பத்தி மன்னரான ஆண்ட்ரே மெல்னிசென்கோ(50) உக்ரைனின் மீதான இந்த போர் விரைவில் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சகோதர மக்கள் ஒருவரை ஒருவர் தூக்கிக்கொண்டு உயிரிழப்பது மிகுந்த மன வேதனை தருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தித்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் குறிப்பில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் பிரத்தியேக போரானது விரைவில் நிறுத்தப்பட வேண்டும், ஏற்கனவே உலக சந்தையில் தானியங்களுக்கான உரங்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் இது மிகவும் அவசியமாகிறது.
கோவிட் தொற்றால் ஏற்கனவே உலகளாவிய சந்தையில் உணவு சங்கலி பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில், ரஷ்யாவின் இந்த போரால் உணவு சங்கலியானது மேலும் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இது ஐரோப்பாவில் இன்னும் அதிகமான உணவு பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் மற்றும் உலகின் ஏழ்மையான நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் எனவும் ரஷ்யாவின் மிகப்பெரிய உரம் மற்றும் நிலக்கரி உற்பத்தியாளரான ஆண்ட்ரே மெல்னிசென்கோ தெரிவித்துள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago