ABC ஜூஸ் பற்றி தெரியுமா? இதை தொடர்ந்து குடித்தால் நிகழும் அதிசயங்கள்
Mar 12, 2022 70 views Posted By : YarlSri TV
ABC ஜூஸ் பற்றி தெரியுமா? இதை தொடர்ந்து குடித்தால் நிகழும் அதிசயங்கள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது அவசியம்.
அதிலும் வெயில் காலம் தொடங்கிவிட்டதால், பழச்சாறுகள் அதிகம் அருந்த வேண்டும், தண்ணீர் சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் கேரட், பீட்ரூட், ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்துள்ளது நமக்கு தெரிந்த ஒன்று தான், ஆனால் இவை மூன்றையும் சேர்த்த ABC ஜூஸில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
இந்த ABC ஜூஸ் செல்களை புத்துயிர் பெற செய்வதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1 தோல் உரிக்கப்பட்டது
பீட்ரூட் – 1/2
கேரட் – 1 நடுத்தர அளவிலானது
தயார் செய்வது எப்படி?
இந்த மூன்று பொருட்களையும் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும். விருப்பப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
எப்போது பருக வேண்டும்?
காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. மாற்றாக, நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம். உதாரணமாக, நீங்கள் காலை 11 மணியளவில் சாப்பிடலாம், இது காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாகும். அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் கூட இவற்றை பருகலாம்.
நன்மைகள் என்னென்ன?
* உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும், புற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுகிறது.
* குடல் புண்ணையும், வயிற்று புண்ணையும் குணப்படுத்துகிறது, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
* கண் எரிச்சல், கண் வலியால் அவதிப்படும் நபர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
* உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்வை தருகிறது, உடல் எடையையும் குறைக்கும்.
* முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகளை போக்குவதுடன் வயது முதிர்வையும் தடுக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago