Skip to main content

அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம்!

Nov 04, 2021 172 views Posted By : YarlSri TV
Image

அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் தீபாவளி கொண்டாட்டம்! 

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரவலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.



சிறப்புமிக்க இந்த நிகழ்வினை, பிரதமரின் பாரியார், ஷிரந்தி ராஜபக்ஷ மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.



இதனைத் தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை நிகழ்வினைக் கொண்டாடி மகிழும் வகையில் பிரதமர் மற்றும்  அவரது பாரியாரினால் இந்து சமய அறநெறிப் பாடசாலைச் சிறார்களுக்கு இனிப்புப் பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால், புதிய பாடத்திட்ட நடைமுறைக்கு  அமைவாக வெளியிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன இந்நிகழ்வில் கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்குப் பிரதமரால் வழங்கி வைக்கப்பட்டன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை