Skip to main content

அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்

Feb 02, 2022 90 views Posted By : YarlSri TV
Image

அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள் 

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரியூட்டும் சுடலை பழுதடைந்துள்ளதால் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.



நாட்டில் தற்போது கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் மரணங்களும் அதிகளவில் சம்பவிக்கின்றன.



ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட்  தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலத்தை பொலநறுவை பிரதேச தனியார் வாகனங்களில் கொண்டு சென்று எரியூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.



திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் திருகோணமலை நகராட்சி மன்றத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்த இந்த எரியூட்டும் சுடலை பல நாட்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் இதனை புனரமைப்பதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



 



ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்-திருகோணமலை போன்ற இடங்களில் எரியூட்டும் சுடலை இருந்தபோதிலும் இரண்டு இயந்திரங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதனால் சடலங்களை எரியூட்டுவதற்கு வவுனியா அல்லது பொலநறுவை போன்ற பிரதேசத்திற்கு கொண்டு செல்வதாகவும் இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.



ஆகவே திருகோணமலை நகர சபையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எரியூட்டும் சுடலையை மிக விரைவாக புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

1 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

1 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

1 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

1 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

1 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை