சங்காவின் உருக்கமான வேண்டுகோள் !
Sep 17, 2022 76 views Posted By : YarlSri TV
சங்காவின் உருக்கமான வேண்டுகோள் !
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகேயினால் பிடிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை காட்சிகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட குமார் சங்கக்கார
'நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது! எங்கள் தீவு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது.
குறித்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள குமார் சங்கக்கார இலங்கை மீண்டும் விருந்தினர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..
தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள குமர் சங்கக்கார
'எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இது ஒரு கடினமான ஆண்டுஇ ஆனால்இ நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி இங்கு சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பயண ஆலோசனைகளை தளர்த்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு கழிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக தேவையற்ற செய்திகள் நல்ல செய்திகளை விட வேகமாக பரவுகின்றன. எனவே தயவுசெய்து இதனை பகிரவும்இ 'என்று சங்கக்கார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago