Skip to main content

என்னைக் கொல்லாதீங்க அம்மா என தாயாரிடம் அழுது கெஞ்சிய 5 வயது சிறுமி: லண்டனில் சம்பவம்

Jan 29, 2022 92 views Posted By : YarlSri TV
Image

என்னைக் கொல்லாதீங்க அம்மா என தாயாரிடம் அழுது கெஞ்சிய 5 வயது சிறுமி: லண்டனில் சம்பவம் 

மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகியுள்ளது.



கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கு லண்டனின் ஈலிங் பகுதியில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.



கார்ட்டூன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அலிஜா தாமஸ் என்ற 5 வயது சிறுமியை அவரது தாயார் 41 வயது மார்டினா மதரோவா என்பவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.



மார்டினா மதரோவா, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. சிறுமி அலிஜா சம்பவத்தின் போது தாயாரிடம் அழுது கெஞ்சியதாகவும், கொன்றுவிட வேண்டாம் என கதறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற பின்னர், படுக்கையில் படுக்க வைத்து, தூக்கத்தில் இருப்பது போன்று ஜோடனை செய்துள்ளார். ஆனால், தகவல் அறிந்து மருத்துவ உதவிக்குழுவினரும் ஆம்புலன்ஸ் சேவையும் குடியிருப்புக்கு வந்த நிலையில், மார்டினா மதரோவா அழுது புலம்பியதாக கூறப்படுகிறது.



மட்டுமின்றி, கொல்லாதீங்க அம்மா என சிறுமி அலிஜா கதறியபோது, உன்னை கண்டிப்பாக கொல்ல மாட்டேன், உனக்கு உதவி தான் செய்கிறேன் எனவும் அவர் தமது மகளிடம் கூறியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை