Skip to main content

எஸ்பிபி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்!

Sep 25, 2020 354 views Posted By : YarlSri TV
Image

எஸ்பிபி சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்! 

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 51 நாட்களாகச் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவரின் உடல்நிலை மோசமடைந்தாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவரின் இதய துடிப்பு, நாடி துடிப்பு சீராக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவருக்கு உயிர் காக்கும் மருத்துவ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் எஸ்பிபி மகன் சரண், மகள் பல்லவி, மனைவி சாவித்திரி, தங்கை எஸ்பி ஷைலஜா ஆகியோர் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வருகை புரிந்துள்ளனர். அத்துடன் கூடுதல் காவல் ஆணையர் அருண் எம்ஜிஎம் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் எஸ்பிபி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் பதட்டம் அடையத் தொடங்கியுள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை