Skip to main content

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு!

Dec 31, 2021 101 views Posted By : YarlSri TV
Image

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 4 பேர் உயிரிழப்பு! 

பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.



குவெட்டாவின் முக்கியப் பாதைகளில் ஒன்று ஜின்னா சாலை. இங்குள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த வகையை சேர்ந்த வெடிகுண்டு அது என்பது குறித்து

அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.



இறந்தவர்கள் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குவெட்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெடி குண்டு வெடித்து சிதறிய பகுதியின் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கண்ணாடி துண்டுகள் மற்றும் ஆணி காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



நடப்பாண்டு ஏப்ரலில் குவெட்டா நகரில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில்  ஐந்து பேர் உயிரிழந்தனர்.  12 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், பாகிஸ்தான் எல்லைப்பகுதி மாகாணங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



குவெட்டா நகரில் செயல்பட்டு வரும்  பாகிஸ்தான் தலிபான் இயக்கம் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை