ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் - அதிபர் ஜோ பைடன்...
Sep 01, 2021 132 views Posted By : YarlSri TV
ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன் - அதிபர் ஜோ பைடன்...
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன். நாங்கள் அதை விரைவில் தொடங்கியிருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதனை முன்பு செய்திருந்தால், அது அவசரம் அல்லது உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்திருக்கும். சவால்கள், அச்சுறுத்தல்கள் இல்லாமல் போரின் முடிவில் இருந்து வெளியேற்றம் என்பது சாத்தியம் இல்லை.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ இருப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முடிவு பொதுமக்கள், ராணுவ ஆலோசகர்கள், சேவைத் தலைவர்கள் மற்றும் களத்தில் தளபதிகளின் ஒருமித்த பரிந்துரையின் அடிப்படையில் அமைந்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றத்தின் வெற்றிக்கு எங்கள் ராணுவத்தின் தன்னலமற்ற தைரியம் காரணமாக இருந்தது. அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு சேவை செய்தனர். போர் நோக்கத்தில் அல்ல, கருணையின் நோக்கத்தில். வரலாற்றில் இதை எந்த தேசமும் செய்யவில்லை, அதை அமெரிக்கா மட்டுமே செய்தது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது சரியான மற்றும் புத்திசாலித்தனமான சிறந்த முடிவு என்று நான் நம்புகிறேன்.
ஆப்கானிஸ்தானில் போர் இப்போது முடிந்துவிட்டது. இந்த போரை எப்படி முடிப்பது என்று இந்த பிரச்சினையை எதிர்கொண்ட 4-வது அதிபர் நான். இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று அமெரிக்கர்களுக்கு நான் உறுதி அளித்தேன், அதை நான் நிருபித்தேன்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வெளியேறுவது தன்னிச்சையான காலக்கெடுவால் அல்ல, இது அமெரிக்க உயிர்களைக் காப்பாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டது, என் முன்னோடி, முன்னாள் ஜனாதிபதி மே 1ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகளை அகற்ற தலீபானுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
அமெரிக்காவிற்கு தீங்கு செய்ய விரும்புபவர்களுக்கோ அல்லது எங்களுக்கு எதிராகவோ அல்லது நட்பு நாடுகளுக்கு எதிராகவோ பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு, அமெரிக்கா ஒருபோதும் அடிபணியாது என்பதை நான் தெளிவாக கூறுகிறேன் என தெரிவித்தார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago