இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு
Nov 27, 2020 222 views Posted By : YarlSri TV
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன பதவியேற்பு!
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன, இன்று பொலிஸ் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை வருடங்களாக வெற்றிடமாக இருந்த பொலிஸ்மா அதிபர் பதவிக்கு, பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் பரிந்துரைக்கப்பட்டார்.
மேலும் நாடாளுமன்ற பேரவையிலும் ஜனாதிபதியின் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்தே 35ஆவது பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 34ஆவது பொலிஸ்மா அதிபர் தெரிவின்போதும் சி.டி.விக்கிரமரத்னவின் பெயர் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவினால் அரசியலமைப்பு பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன்போது சிரேஷ்டத்துவத்தில் 3ஆவது இடத்தில் அவர் இருந்த நிலையில், பூஜித் ஜயசுந்தர அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago