4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு என்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி: மல்லிகார்ஜுன கார்கே!
Dec 20, 2021 94 views Posted By : YarlSri TV
4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு என்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி: மல்லிகார்ஜுன கார்கே!
பாராளுமன்றத்தின் கடந்த கூட்டத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்டதாக 12 மாநிலங்களவை எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. ஆனால், கூட்டம் முடியும் வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
கடந்த 29-ந்தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, 12 எம்.பி.க்களும் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாத வகையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆறு காங்கிரஸ் எம்.பி.க்கள், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவ சேனா கட்கியை சேர்ந்த தலா இரண்டு எம்.பி.க்கள்., இரண்டு இடது சாரி கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து, 12 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. போராட்டங்களும் நடத்தி வருகின்றன. ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்படவில்லை.
இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 10 மணி நேரம்தான் அவைதான் நடந்துள்ளது. இதனால் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான்கு கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு 4 கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருப்பது எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சதி. சஸ்பெண்ட் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக உள்ளன. நான்கு கட்சிகள் என்பது நியாயமற்றது மற்றும் துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வலுவிழந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவையென வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்தின் உபதலைவர் வைத்தியர்க.நந்தகுமார் தெரிவித்தார்!
-
ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
-
மதுரை மாநகர காவல்துறையினர் எளிதாக குற்றவாளிகளை அடையாளம் ‘பேஸ் டாக்கர்’ (FACETAGR) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர்!
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago