Skip to main content

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Jan 21, 2021 193 views Posted By : YarlSri TV
Image

ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! 

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் 50ஆயிரத்து 296பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 10ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில், இதுவரை மொத்தமாக 20இலட்சத்து 90ஆயிரத்து 161பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 525பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 52பேர் உயிரிழந்துள்ளனர்.



தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 98ஆயிரத்து 65பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஐந்தாயிரத்து 74பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 17இலட்சத்து 41ஆயிரத்து 800பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை