Skip to main content

வலுவிழந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவையென வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்தின் உபதலைவர் வைத்தியர்க.நந்தகுமார் தெரிவித்தார்!

Sep 05, 2020 254 views Posted By : YarlSri TV
Image

வலுவிழந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவு தேவையென வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கத்தின் உபதலைவர் வைத்தியர்க.நந்தகுமார் தெரிவித்தார்! 

 



வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்க வருடாந்த கூட்டத்தின் பின் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்



வலுவிழந்தோர் புனர்வாழ்வுச்சங்கம் மாற்று வலுவுடையவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எங்களுடைய பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முன்வந்த மாற்று திறனாளிகளுக்கு சில  பயிற்சிகள் முக்கியமாக தையல் பயிற்சி, மாலை கட்டுதல், கதிரை பின்னுதல் காகித உரை மடித்தல்  அவர்களால்  செய்யக்கூடிய  அவர்களால் என்ன  செய்யமுடியுமோ அவர்களை அந்த துறையில் வளர்த்து விட்டு அவர்களை சொந்த காலில் நின்று தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டது தான் இந்த நிறுவனம் 



1990 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பத்திலிருந்து இன்றைய தினம் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது இந்த நிறுவனத்தில் செயற்பாடுகளில் மாற அவர்கள் ஒவ்வொரு நாளும் வீடுகளிலிருந்து இந்த நிறுவனத்திற்கு வருகைதந்து பயிற்சி பெறுவது கடினம் அவர்களுக்காக தங்குமிட வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் 



அதேபோல் எமது நிறுவனத்தில் ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குறித்த பயிற்சிகளை நிறைவு செய்து தமது சுய தொழில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வருகின்றார்கள் அத்தோடு எமது நிறுவனத்தில் விற்பனை நிலையம் காணப்படுகின்றது அத்தோடு எமக்கு வெளியிடங்களில் இருந்தும் பல ஓடர்கள் நிறுவனத்திற்கு கிடைக்கின்றன இதன் மூலம் எமது வலுவிழந்தோர் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடியதாக இருக்கின்றது இந்த செயற்பாடு மேலும் விரிவடைய வேண்டுமாயின் சமூக ஆர்வலர்கள் மற்றும் கொடையாளிகளின் ஆதரவு கிடைக்குமிடத்தில் எமது இந்த நிறுவனம் மென்மேலும் வளர்ச்சி அடைந்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி புரியும் எனவும் அவர் தெரிவித்தார்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

3 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

3 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

3 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

3 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

3 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

6 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை