Skip to main content

துப்பாக்கி சூடு 14 பேர் படுகாயம் மணிப்பூரில் சம்பவம் !

Jan 03, 2024 28 views Posted By : YarlSri TV
Image

துப்பாக்கி சூடு 14 பேர் படுகாயம் மணிப்பூரில் சம்பவம் ! 

புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங் ஜாவ் பகுதியில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் மரணித்துள்ளார் .



அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கூடுதல் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது 

மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் எதிரொலியாக தவுபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதனிடையே மணிப்பூரில் மியான்மர் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள தெங்னெவுபால் மாவட்டத்தின் மோரே நகரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோரே நகரில் உள்ள கமாண்டோ படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ரொக்கேட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



தேடுதல் நடவடிக்கை 

இந்த நிலையில் மோரே நகரில் நேற்று மாநில காவல்துறையினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.



இதில் காவல்துறையினர் மற்றும் பயங்கரவாதிகள் என 14 பேர் படுகாயம் அடைந்தனர்.





இதனிடையே பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயம் அடைந்த காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர் தலைநகர் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை