தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் ஆற்றங்கரையில் குழந்தை மாயம்!
Nov 27, 2020 227 views Posted By : YarlSri TV
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் ஆற்றங்கரையில் குழந்தை மாயம்!
தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியில் வசித்து வரும் தம்பதி சுந்தர்- பிரியா. இவர்களுக்கு யோகித் (4), நிக்லேஷ் (2) என்ற மகன்கள் இருந்தனர். இந்த தம்பதி தனது பிள்ளைகளுடன் தாத்தா சின்னச்சாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். தோட்டத்தில் வேலை பார்த்து வரும் சின்னச்சாமி, தனது பேரன்களை அழைத்துக் கொண்டு பெரியாற்றங்கரையில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
அவருடன் அவரது மனைவியும் உடன் சென்றிருக்கிறார். தோட்டத்தில் சின்னசாமியும் அவரது மனைவியும் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சிறுவர்கள் இரண்டு பேரும் பெரியாற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அச்சமயம் நிக்லேஷ் நீரில் விழுந்ததை பார்த்த யோகித், சத்தம் போட்டு தனது தாத்தாவை அழைத்துள்ளார். உடனே அங்கு சென்ற சின்னசாமி, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளனர். ஆனால் சிறுவனை எங்கும் காணவில்லையாம்.
சிறுவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டாரா? என கேள்வி எழுந்துள்ளது. சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago