Skip to main content

யாழில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர்கைது.

Dec 11, 2023 29 views Posted By : YarlSri TV
Image

யாழில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர்கைது. 

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை மாணவர்கள் மற்றும்

இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு  யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளனர்.



யாழ்ப்பாணம் - பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.



இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை