ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: பயங்கரவாதி வெறிச்செயல்!
Sep 12, 2021 103 views Posted By : YarlSri TV
ஸ்ரீநகரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை: பயங்கரவாதி வெறிச்செயல்!
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளூர் போலீசார் துணையுடன் வேட்டையாடி வருகின்றனர். இதனால் அவ்வப்போது வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
சில நேரங்களில் பயங்கரவாதிகள் பொதுவான இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள். இன்று ஸ்ரீநகர் கன்யார் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த மார்க்கெட் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மீது பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இரண்டு முறை சுட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஷித் அஹமது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சி.சி.டி.வி. பதிவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு பின்னால் மிக அருகில் இருந்து பயங்கரவாதி தாக்கியது தெரியவந்துள்ளது. அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போலீசார் பயங்கரவாதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago