ஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
Aug 01, 2021 216 views Posted By : YarlSri TV
ஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி தங்களது கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் அமைந்துள்ள ஐ.நா. வளாகத்தின் முக்கிய பகுதி மீது பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதில், ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த பிற அதிகாரிகளும் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஐ.நா. அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை.
இந்நிலையில், ஐ.நா. சபை வளாகத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்தார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
முதல்ல சிம்பு வேணும்... அப்பறம் தண்ணீர் வேணும்! எங்களை சேர்த்து வைங்க ப்ளீஸ்... சிம்பு வீட்டு முன்பு பிரபல நடிகை தர்ணா
-
குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 3 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டது. அந்த கடன் தொகையை முழுமையாக செலுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எந்த தொழிலும் இல்லாத நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் எப்படி கடனை திருப்பி செலுத்துவார்கள். அதனால் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவை வாபஸ் பெற வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிவாரண உதவி திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதில் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.494 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை, அந்த தொழிலாளர்களின் நல வாரியத்தில் உள்ள நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாது. அரசு தனது நிதியில் இருந்து நிவாரணமாக ரூ.617 கோடி மட்டுமே வழங்குகிறது. அண்டை மாநிலங்களை விட கர்நாடகத்தின் நிதி நிலை நன்றாக உள்ளதாக எடியூரப்பா கூறினார். அப்படி என்றால், அந்த மாநிலங்கள் வழங்கியுள்ள நிவாரண உதவிகளை விட அதிகமாக கர்நாடகம் வழங்க வேண்டும். பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியின் சாதனை பூஜ்ஜியம். நாடு இருட்டில் சிக்கி தவிக்கிறது. மக்களின் கண்களில் கண்ணீர் வடிகிறது. பொய்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை பா.ஜனதா. 70 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு நிறுவப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்துவிட்டது. அதற்கு பதிலாக பொய் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் வளர்ச்சியில் நாடு வேகமாக பின்னோக்கி செல்கிறது. மத்திய பா.ஜனதா அரசின் 7 பெரிய பேரழிவு திட்டங்களால் நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதாவது, பண மதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி., கொரோனா 2-வது அலை உருவாக காரணமாக இருந்தது, ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதந்தது, விவசாய விரோன சட்டங்களை கொண்டு வந்தது, வேலையின்மை, நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை சொத்துகளை விற்பனை செய்தது, விலைவாசி உயர்வு போன்றவை ஆகும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் திவாலாகி வருகின்றன. மாநிலங்கள் திவாலானால், நாடும் திவலானதாக அர்த்தம். சாமானிய குடும்பங்கள் கடந்த 2019-ம் ஆண்டு மாதம் ரூ.5 ஆயிரத்தில் குடும்பத்தை நடத்தின. ஆனால் இன்று அது ரூ.11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மக்களின் உழைப்பால் கிடைக்கும் பலன், அம்பானி, அதானிக்கு செல்கிறது. இவ்வாறு சித்தராமையா கூறினார்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago