குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
Aug 26, 2020 328 views Posted By : YarlSri TV
குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வ அறிவிப்பு!
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலின் போதே அமெரிக்க துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார். இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பும், துணை ஜனாதிபதி மைக் பென்சும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடனும், துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட செனட் சபை எம்.பி. கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள்.
அண்மையில் நடந்து முடிந்த ஜனநாயக கட்சி தேசிய மாநாட்டில் ஜோ பைடனும், கமலா ஹாரிசும் ஜனநாயக கட்சி வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 4 நாள்கள் நடைபெறும் இந்த மாநாடு வடக்கு கரோலினாவின் சார்லட் நகரில் நடத்தப்படுகிறது.இதில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக டிரம்பும், மைக் பென்சும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஐ.நா.வுக் கான அமெரிக்காவின் முன்னாள் தூதரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மற்றும் ஜனாதிபதி டிரம்பின் மகன் ஜூனியர் டிரம்ப் ஆகிய இருவரும் மாநாட்டில் உரையாற்றினர்.
அவர்கள் இருவரும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்து டிரம்புக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதனிடையே மாநாடு நடந்த மேடையில் ஜனாதிபதி டிரம்ப் திடீரென தோன்றினார். அப்போது அவர் பேசுகையில், “அமெரிக்க வரலாற்றில் வரும் ஜனாதிபதி தேர்தல் மிக முக்கியமானது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சி வெற்றிபெற்றால் அமெரிக்காவை சீனா ஆளும் நிலை ஏற்படும். நமது நாடு ஒருபோதும் பொதுவுடைமை நாடாகாது. இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்” என உறுதிபட தெரிவித்தார்.
முன்னதாக டிரம்பின் பிரசார குழுவினர் மாநாட்டில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் 10 மாதங்களில் அமெரிக்காவில் 1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; அமெரிக்க நிறுவனங்களில் உள்நாட்டவர்களுக்கு பதிலாக குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு பணியாளர்கள் பணியமர்த்தப்படுவது தடை செய்யப்படும்; ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படும்; சீன நிறுவனங்களுக்கு அயலக சேவை வழங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்படாது உள்பட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி சமகால அரசயல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளன!
-
விளையாடிக்கொண்டிருந்த 12 வயதான தமிழ் சிறுமி மாயம்! தீவிர தேடுதலில் பொலிஸார்
-
கோப்பாய் Covid-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் வீடுகளுக்குஅனுப்பி வைப்பு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago