அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து!
Jul 30, 2021 188 views Posted By : YarlSri TV
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து!
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள பஸ்களுக்கு மாத்திரமே மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்தை நடத்த முடியுமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காரணத்தால் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எனினும், ஆகஸ்ட் மாதம் முதல் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்போருக்காக மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்கும், இந்த சேவைகளை அலுவலக நேரங்களில் நடத்துவற்கும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago