Skip to main content

லாரி மீது கார் மோதல் – தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Oct 21, 2020 225 views Posted By : YarlSri TV
Image

லாரி மீது கார் மோதல் – தம்பதி உட்பட 3 பேர் உயிரிழப்பு! 

நிலக்கோட்டை அருகே கண்டெய்னர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் எஸ்.எஸ் காலனியை சேர்ந்தவர் சௌமிநாராயணன்.



இவர் நேற்று காலை நிலக்கோட்டையில் இருந்து குடும்பத்தினருடன் காரில் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். வத்தலகுண்டு சாலையில் சென்றபோது, கார் எதிர்பாராத விதமாக எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சௌமிநாராயணன்(41), அவரது மனைவி திவ்யா(35) மற்றும் அக்கா மகன் ஸ்ரீராம்(15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை