கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது!
Jul 17, 2021 189 views Posted By : YarlSri TV
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது!
கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி நேற்று மாலை முதல் 14 நாட்களுக்கு முடக்கப்பட்டது.
வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களிற்குள் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,நேற்று மட்டும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முழுமையான முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு குறிப்பிட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி கட்சன் வீதியில் நேற்றைய தினம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார பிாிவு தொிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கடந்த 4 நாட்களில் 4 மற்றும் 6 வயதான சிறுவர் உட்பட 15 போ் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.
மேற்படி 15 போில் 10 போ் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 3 போ் நேற்றைய முன்தினமும், அதற்கு மூன்று தினங்கள் தலா ஒவ்வொருவரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனா்.
இந்நிலையில் குறித்த பகுதி நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ஏறத்தாழ300 குடும்பங்களை சேர்ந்த 950 பேர் முடக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முழுமையான முடக்கம் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும், வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது.
இதேவேளை 9 முக்கிய இடங்களில் இராணுவத்தினரால் வீதி தடைகள் அமைக்கப்பட்டு கடமையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1470 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1470 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1470 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1470 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1470 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1470 Days ago