இ-பாஸ் நடைமுறை ரத்து : கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறக்க ஏற்பாடு!
Jul 04, 2021 146 views Posted By : YarlSri TV
இ-பாஸ் நடைமுறை ரத்து : கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் திறக்க ஏற்பாடு!
கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அனுமதி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா தலங்களை நாளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் வருகின்ற 12ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது . கடந்த சில வாரங்களாக மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை அனைத்து மாவட்டத்திற்கும் ஒட்டுமொத்தமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இபாஸ் மற்றும் இபதிவு நடைமுறையை ரத்து செய்யப்படுகிறது.
அத்துடன் பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல் ,கிருமிநாசினி பயன்படுத்துதல் ஆகியவை நிர்வாகத்தால் முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த பூங்காக்களில் திறந்தவெளியில் நடத்தப்படும் விளையாட்டுக்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும் தண்ணீர் தொடர்பான விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து தொற்றுகள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
அதன்படி இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இபாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலா தலங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ரோஜா பூங்கா வைத்திருக்க தோட்டக்கலைத் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago