மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு
Nov 01, 2020 251 views Posted By : YarlSri TV
மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறது” – முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கலகம் மூலமாக மக்களை மோதவிட்டு, பேசாததை பேசியதாக கூறி, பாஜக அரசியல் ஆதாயம் தேட முயல்வதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த விவசாயிகள், தொழிலாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஆடுகள் மோதிக்கொள்ள வேண்டும், அதன் ரத்தத்தை
ருசித்துக்கொள்ள வேண்டும் என தந்திர நரி விரும்புவது போல பாஜக விரும்புவதாகவும், அந்த முயற்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முத்தரசன் கூறினார். மேலும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பா.ஜ.க இயற்றிவிட்டு அதனை நியாயப்படுத்துவது போல திரும்ப, திரும்ப பேசுவது ஒருபோதும் வெற்றிபெறாது என்று கூறிய அவர்,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக வரும் நவம்பர் 26 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய பொதுவேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்து தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவில் நிச்சயமாக போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago