புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறப்பதற்கு எதிராக வழக்கு!
Jun 07, 2021 188 views Posted By : YarlSri TV
புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையை திறப்பதற்கு எதிராக வழக்கு!
கொரோனா தொற்றின் பின்னர் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான அறிவுறுத்தல் கடிதம் ஒன்று புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலை மனிதவள முகாமையாளருக்கு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த அல்லது தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட அல்லது பரிசோதனையில் கொவிட் தொற்று அறியப்படாதவர்களைக் கொண்டு ஆடைத் தொழிற்சாலையை மீள இயக்குமாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடுகையில்,
ஆடைத்தொழிற்சாலை வாயிலில் போதிய கைகழுவும் வசதி செய்து தரப்படுவதுடன், எல்லோரும் சரியான முறையில் கை கழுவுவதை உறுதிப்படுத்துதல். சுயதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்தோ அல்லது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்திலிருந்தோ தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
சகல ஊழியர்களும் தடுப்பூசி வழங்குவதை உறுதிப்படுத்தவும். அதிக நோய்த் தொற்றுள்ள பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சம்மந்தமான தகவல்களை தங்கள் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உடன் அறியத்தர வேண்டும்.
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் தங்கள் உத்தியோகத்தர்களுக்கு எழுமாறான பி.சி.ஆர் செய்யப்படும் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
ஊழியர்கள் வேலைசெய்யும் வேலைத்தளத்தின் கண்காணிப்பு கமரா பதிவுகளைத் தேவைப்படும் போது சுகாதார வைத்திய அதிகாரி உத்யோகத்தர்கள் பார்வையிட ஒழுங்கு செய்யப்படவேண்டும்.
கொவிட் பாதுகாப்பு சுகாதார நடைமுறை சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட கடிதம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழில் சாலையை மீளத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதுக்குடியிருப்பு வர்த்தகர் சங்கத்தினர் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை திறப்பிற்கு வழக்கு ஒன்று தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
ரொமான்சுக்கு மாறிய ‘அண்ணாத்த’.... வெளியானது சர்ப்ரைஸ் அப்டேட்
-
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் சட்டவிரோதமாக உணவுப்பொதிகளை வழங்கிய சிறைக்காவலர் பணியிலிருந்து இடைநிறுத்தம்
-
ஆமதாபாத்தின் அஸ்வாரா பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் மருத்துவ பணியாளர்கள் 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது!
கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
13 Hours agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1475 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1475 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1475 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1476 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1476 Days ago