Skip to main content

கோட்டாவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம்! – சஜித் சூளுரை

Apr 17, 2021 206 views Posted By : YarlSri TV
Image

கோட்டாவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம்! – சஜித் சூளுரை 

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.



அத்துடன் மக்களை வாழ வைக்கும் ஆட்சியே தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனவும் அவர் உறுதிப்படக் கூறினார்.



செல்லக்கதிர்காமம் – கரவிலே பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உலகத்துக்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.



நண்பர்களே எமக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் ஆட்சியல்ல. எமது நாட்டுக்குத் தேவை கொலை கலாசாரம் அல்ல.



நாம் தற்போது செய்ய வேண்டியது கொலைகளை அல்ல. மக்களை வாழ வைக்க வேண்டியதையே நாம் செய்ய வேண்டும்” – என்றார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையேற்படின் ஹிட்லராகவும் மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை