Skip to main content

வரணியில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

Aug 26, 2020 266 views Posted By : YarlSri TV
Image

வரணியில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில்!! 

தென்மராட்சி வரணிப் பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



இச்சம்பவம்  வரணி இயற்றாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.



இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் மகன் வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பும் போது சுட்டிபுரம் பகுதியில் 10 பேர் கொண்ட இனந்தெரியாத கும்பல் பேருந்தை வழி மறித்து குறித்த இளைஞனை கடத்திச் சென்று வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.



படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



குறித்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை