மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்!
Feb 09, 2021 213 views Posted By : YarlSri TV
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்!
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியை சேந்தவர் சுப்பிரமணி. இவர் தனது மனைவி இந்திராணி, மகள் மகாலட்சுமி மற்றும் உறவினர்கள் இருவருடன் நேற்று திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றார். சுவாமி தரிசனம் முடித்து நேற்றிரவு 5 பேரும் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்றபோது கார் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியின் மீது அதிவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த சுப்பிரமணி, இந்திராணி, மகாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago