Skip to main content

மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன்

Mar 04, 2021 159 views Posted By : YarlSri TV
Image

மே மாதத்துக்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கும் கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன் 

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்கா ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது.



உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது.



அங்கு கொரோனா பாதிப்பு 3 கோடியை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் கொரோனா உயிரிழப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.‌



எனினும் அமெரிக்காவில் வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.



அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.



தனது பதவிக் காலத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார்.‌



ஏற்கனவே பைசர் மற்றும் மாடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், 3-வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



இந்தநிலையில் திட்டமிட்டதைவிட தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருவதால் வருகிற மே மாதத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ஜனாதிபதி ஜோ பைடன் சூளுரைத்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘மே மாத இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு வயது வந்தோருக்கும் போதுமான தடுப்பூசி வழங்குவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம். அதேபோல் நாடு முழுவதும் அதிகமான பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த மாத இறுதிக்குள் அனைத்து கல்வியாளர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியை வழங்க வேலை செய்து வருகிறோம்’’ எனக் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

15 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

15 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

15 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

15 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

15 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

15 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை