Skip to main content

யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம்

Feb 07, 2021 233 views Posted By : YarlSri TV
Image

யாங்கோனில் இரண்டாவது நாளாக போராட்டம் : இணையச் சேவையை முடக்கம் 

மியான்மரின் முக்கிய நகரமான யாங்கோனில் இரண்டாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடி, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.



இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை தங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.



இருப்பினும் யாங்கோன் பல்கலைக்கழகத்திற்கு அருகே உள்ள வீதிகளில் பொலிஸார் மற்றும் கலகத்தை கட்டுபடுத்தும் அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



இதேவேளை டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு இராணுவம் தடை விதித்த சில மணி நேரத்தில் இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது.



மேலும் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும், ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

10 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

10 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

10 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

10 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

10 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

10 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை