யாழ் மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதிமேஜர் ஜெனரல் செனரத் பண்டார யாழ் மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்!
Aug 24, 2020 264 views Posted By : YarlSri TV
யாழ் மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதிமேஜர் ஜெனரல் செனரத் பண்டார யாழ் மாவட்ட அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்!
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டார் குறித்த சந்திப்பின் போது
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகளுக்கு தனது நன்றியினை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ராணுவத்தினர் இந்த மனிதாபிமான செயற்பாடுகளை வடபகுதியில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அத்தோடு யாழ் மாவட்டத்தில் 700க்கும் மேற்பட்ட வீடுகள் இராணுவத்தினரால் வீடற்றவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது இந்த விடயத்தினை தான் வரவேற்பதாகவும்
மேலும் வீடற்ற மக்களுக்கு இவ்வாறான உதவிகளை தொடர்ந்து ராணுவ முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் அத்தோடு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்கள், ,அண்மையில் மீள்குடியேறிய மக்கள் தொடர்பிலும் கூடிய கரிசனை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட அரச அதிபர்
தற்போது அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்தொடர்பிலும் யாழ்மாவட்ட கட்டளைத் தளபதிக்கு விளக்கமளித்திருந்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி யாழ்ப்பாணத்தில் சந்திப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தற்போது நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடினார் குறித்த சந்திப்பில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) s.முரளிதரன் ,உதவி மாவட்ட செயலர் மற்றும் ராணுவத்தின் 512 பிரிகேட்ட் கட்டளைத்தளபதி ரத்நாயக்க மற்றும் பலாலி ராணுவ கட்டளை தலைமையக உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்
குறித்த சந்திப்பின் பின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு ராணுவ தளபதியினால் நினைவுப் பரிசிலும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago