Skip to main content

கொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு

Jan 26, 2021 246 views Posted By : YarlSri TV
Image

கொரோனாவால் 49 வயது பெண் உட்பட மேலும் நால்வர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 287ஆக அதிகரிப்பு 

இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



அதன்படி, பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும் தெரணியகல பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரும் வலகாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.



இதனையடுத்து, நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்வடைந்துள்ளது.



இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 737 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 167 ஆக அதிகரித்துள்ளது.



அவர்களில் 50 ஆயிரத்து 337 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில், எண்ணாயிரத்து 543 பேர் தொடர்ந்தும் வைத்தியயசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை