Skip to main content

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு – அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை!

Jan 20, 2021 221 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு – அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை! 

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.



குறித்த விடயம் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.



நேற்றைய தினம் இரண்டு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து இந்த விசாரணை நிறைவடைந்தன.



இந்த நிலையில், ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.



குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி 21ஆம் திகதி நிறைவடைந்தது. இதனையடுத்து, வர்த்தமானி மூலம் அந்த காலம் எதிர்வரும் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை