Skip to main content

ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பாக 315 மில்லியன் திர்ஹாம்: டுபாய் இளவரசர் அறிவிப்பு!

Jan 07, 2021 242 views Posted By : YarlSri TV
Image

ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பாக 315 மில்லியன் திர்ஹாம்: டுபாய் இளவரசர் அறிவிப்பு! 

டுபாயில் ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பாக 315 மில்லியன் திர்ஹாம் தொகையினை, பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.



கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் வர்த்தகங்கள், தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த தொகை செலவிடப்படவுள்ளது.



முதற் கட்டமாக கடந்த மார்ச் மாதம் 12ஆம திகதி 150 கோடி திர்ஹாம் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29ஆம திகதி 330 கோடி திர்ஹாமும், மூன்றாவதாக கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி 150 கோடி திர்ஹாமும், நான்காவதாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 50 கோடி திர்ஹாமும் நிவாரண நிதி தொகுப்பு அளிக்கப்பட்டு இருந்தது.



தற்போது ஐந்தாவது கட்ட நிவாரண நிதி தொகுப்பும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் விலக்குகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.



சுற்றுலாத்துறை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் துறைகள் பொறுத்தவரையில் கண்காட்சிகள், மாநாடுகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் ஒத்திவைப்பு மற்றும் நிகழ்ச்சியை இரத்து செய்வதற்கான கட்டணங்களில் இருந்து தொடர்ந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சலுகை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுவரை அளிக்கப்பட்ட 5 பொருளாதார நிவாரண நிதி தொகுப்புகளின் மதிப்பு 710 கோடி திர்ஹாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிவாரண நிதி தொகுப்பானது இந்த ஜனவரி மாதம் முதல் வரும் ஜூன் மாதம் வரை அளிக்கப்படும். இதுவரை டுபாயில் மொத்தம் 710 கோடி திர்ஹாம் நிவாரண நிதி தொகுப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

2 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

2 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

2 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

2 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

2 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

5 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை