Skip to main content

விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு!

Jan 17, 2021 222 views Posted By : YarlSri TV
Image

விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பரபரப்பு! 

ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இங்கிருந்து இயங்குவதால் எப்போதும் இந்த விமானநிலையம் மிகவும் பரபரப்பாகவே இருக்கும்.



இந்நிலையில், அந்த விமான நிலையத்திற்கு மாலை 5.16 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) பெட்டியுடன் ஒரு நபர் வந்தார். அவர் கொரோனா விதிகளான முகக்கவசம் அணியாததால் அவரை தடுத்து நிறுத்திய போலீசார் முகக்கவசம் அணித்துவிட்டு வரும்படி கூறினர்.



அப்போது அந்த நபர் போலீசாரை நோக்கி, ‘நான் உன்னை கொன்றுவிடுவேன், அல்லாஹு அக்பர் (கடவுளே சிறந்தவன்)’ என கூறிக்கொண்டு தனது கையில் வைத்திருந்த பெட்டியை விமான நிலையத்திலேயே வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றான்.



இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் துப்பாக்கி முனையில் அந்த நபரை சுற்றிவளைத்தனர். மேலும், அந்த நபர் கொண்டுவந்த பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என சந்தேகம் எழுந்ததுள்ள வெடிகுண்டு நிபுணர்கள் வரவலைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது.



இந்த பரபரப்பு சம்பவங்களால் பிராங்க்பிரட் விமானநிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அனைத்து விமான போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானநிலையம் மூடப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனையில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

 



இதையடுத்து, துப்பாக்கிமுனையில் கைது செய்யப்பட்ட அந்த நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர். அதேபோல், அந்த விமான நிலையத்தின் மற்றொரு நுழைவு வாயிலில் மர்மநபர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக தகவல் வெளியாகியுள்ளது என டெய்லி மெயில் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை