தடுப்பூசியை பகிரங்கமாக போட்டுக்கொள்வேன், அது எனது தார்மீக கடமை என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்!
Dec 11, 2020 265 views Posted By : YarlSri TV
தடுப்பூசியை பகிரங்கமாக போட்டுக்கொள்வேன், அது எனது தார்மீக கடமை என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்!
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமைச்செயலகத்தில் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம்,“கொரோனா தடுப்பூசி உங்களுக்கு கிடைக்கும்போது அதை பகிரங்கமாக செலுத்திக்கொள்வீர்களா?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “நிச்சயமாக. தடுப்பூசி எனக்கு கிடைக்கிறபோது, அதை நான் பகிரங்கமாக பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். பகிரங்கமாக என்று சொல்வதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசியை அணுகக்கூடிய அனைவரையும் போட்டுக்கொள்ளுமாறு நான் ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் இது ஒரு சேவை ஆகும்.
நாம் நமக்கு வழங்குவது மட்டுமல்ல. நாம் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது முழு சமூகத்துக்கும் ஒரு சேவையை வழங்குகிறது. ஏனென்றால், நாம் தொற்றுநோயை இனி பரப்புவது இல்லை. நோய் பரவும் ஆபத்தும் இல்லை. எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது நம் அனைவருக்கும் தார்மீக கடமை ஆகும்.
தடுப்பூசி உலகளாவிய பொது நன்மைக்காக எல்லா இடங்களிலும் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிலும் கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago